இலங்கையில் மதுபான வகைகளுக்கு அறவிடப்படுகின்ற வரியை குறைக்குமாறு மதுவரி திணைக்களம் நிதியமைச்சிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
13 மதுபான உற்பத்தி நிறுவனங்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்க மதுவரித் திணைக்களம் நிதியமைச்சிடம் வரியை குறைக்க கோரி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் மதுவிற்பனை 40 சதவீதத்தினால் குறைந்துள்ள நிலையில், அவற்றின் விலையை குறைக்கும் நோக்கில் வரியை குறைக்குமாறு கோரப்பட்டுள்ளது.