உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில் கணினி மற்றும் தகவல் தொழிநுட்பத்திற்கான தனியான பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டியது முக்கியமானது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க யோசனை முன்வைத்துள்ளார்.
அரச பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பாக உரிய பரிந்துரைகளை வழங்குவதற்கான நாடாளுமன்ற விசேட குழுவில் அமரதுங்க இதனைத் தெரிவித்தார்.
உயர்கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் மேற்படி குழுவிடம் சமர்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.