Sunday, May 11, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரணிலுக்கு எதிராக குற்றப்பிரேரணை?

ரணிலுக்கு எதிராக குற்றப்பிரேரணை?

தேவை ஏற்பட்டால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வர தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், சர்வதேச நாணய நிதியம்,இலங்கையில் கிட்டத்தட்ட 3.5 மில்லியன் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அழித்த பின்னர் தற்போது பொதுமக்களின் எதிரியாக மாறியுள்ளது என்று கூறினார்.

இலங்கை, தற்போது எதிர்பார்த்திருக்கும் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் அண்மையில் எடுத்த தீர்மானங்களை வாசுதேவ நாணயக்கார விமர்சித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு அமைய எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சமூகத்திலும் அவர்களின் வாழ்க்கைச் செலவுகளிலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.

எனினும் நாட்டின் நிலைமை சிறப்பாக இருப்பதாக ஜனாதிபதி தொடர்ந்தும் கூறினால், அவருக்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வர தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles