ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக தேயிலைத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதாக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு வலுவடைந்து வருவதால் ஒட்டுமொத்த ஏற்றுமதித் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தேயிலைத்துறையும் நேரடியாகப் பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இளம் தேயிலை இலைகளுக்கான மேலதிக கொடுப்பனவுகளை நிறுத்த வேண்டியுள்ளதாகவும், மின்சார கட்டணம் அதிகரிப்பதன் காரணமாக தொழிற்சாலை செலவுகளும் அதிகரித்துள்ளதாக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.