Thursday, February 12, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோலி பில்களை சமர்பித்து 4 கோடி ரூபா மோசடி செய்த நபர் கைது

போலி பில்களை சமர்பித்து 4 கோடி ரூபா மோசடி செய்த நபர் கைது

தனியார் நிறுவனமொன்றில் சுமார் 4 கோடி ரூபாவை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் கோட்டை பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகளினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சந்தேக நபர் குறித்த நிறுவனத்தின் ஊழியராக செயற்பட்டு பில்களை மாற்றி மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 34 வயதான மொரட்டுவ, மொல்பே பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவர் இன்று (09) கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles