2040 ஆம் ஆண்டுக்குள் கடலில் வீசப்படும் பிளாஸ்டிக்களின் அளவு 3 மடங்கு அதிகரிக்கும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சர்வதேச விஞ்ஞானிகள் குழு நடத்திய இது தொடர்பான ஆய்வில் தற்போது 171 டிரில்லியன் பிளாஸ்டிக் துண்டுகள் உலகளவில் கடல் நீரில் மிதந்து வருவதாக தெரியவந்துள்ளது.
2005ஆம் ஆண்டு முதல், கடல் நீரில் சேரும் பிளாஸ்டிக்கின் அளவு வேகமாக அதிகரித்து வருவதால், அவசரக் கொள்கை நடவடிக்கை இல்லாமல், பிளாஸ்டிக் சேர்வதைத் தடுக்க முடியாது என்று சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.