பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 3,269 நிலையங்களில் அன்றைய தினம் (18) காலை 9.00 மணி முதல் மதியம் 12.10 மணி வரை இந்த பரீட்சை நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகளையும் தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்ய முடியாது எனவும், அதற்கான பணிகளை பாடசாலைகளே மேற்கொள்ள வேண்டும் எனவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பதாரர்களின் பெயர், மொழி மூலம், தேசிய அடையாள அட்டை எண், பெண்/ஆண் ஆகிய விபரங்களின் திருத்தங்கள் அதிபர்களின் ஆதரவுடன் அதே இணையதளம் மூலம் செய்யப்பட வேண்டும்.
அத்துடன், எதிர்வரும் 12ஆம் திகதி நள்ளிரவுக்குள் உரிய திருத்தங்கள் நிறைவடையும் எனவும், மீளாய்வு திகதிகள் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது எனவும் பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவிக்கின்றார்.