சாரதி பற்றாக்குறை காரணமாக இன்று (06) 24 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் எம்.ஜே.இதிபோலகே தெரிவித்தார்.
அரச ஊழியர்களுக்கு 60 வயதில் ஓய்வு அளிக்கும் தீர்மானம் காரணமாக ரயில் சாரதிகளின் பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரக்கு ரயில்கள் மற்றும் நாவலப்பிட்டி, மாத்தளை, கண்டி, மஹவ, மட்டக்களப்பு போன்ற பல பிராந்திய ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
.