Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழில் தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்

யாழில் தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்

யாழ்ப்பாணம் – பாசையூர் ஈச்சமோட்டை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

குறித்த இளைஞர் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதிக்கு சென்று அங்குள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரது கையில் உள்ள வசனங்களை பார்வையிட்ட பொலிஸார், காதல் தோல்வியால் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

குறித்த இளைஞரின் உடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles