ஊரகஸ்மன்ஹந்திய, பருஸ்ஸகொட, மஹுரகஹ பிரதேசத்தில் நேற்று (05) பிற்பகல் நபர் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் மீன் வியாபாரி என்பதுடன், அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் இன்று (06) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.