பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாச புத்தகங்களை 30 வீத சலுகை விலையில் வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, பாடசாலை மாணவர்கள் அரசாங்க அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட அப்பியாச புத்தகங்களை சதொச கடைகளின் ஊடாக கொள்வனவு செய்ய முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் முதல் நாடு முழுவதும் உள்ள சதொச கடைகளில் அப்பியாச புத்தகங்களை சலுகை விலையில் வாங்க முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
#Aruna