தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் வீதிமறியல் போராட்டங்கள் காரணமாக 500 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன இதனை தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் நாளைய தினம் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.