டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 35 சிறுவர்கள் இருப்பதாக அதன் பணிப்பாளர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.
குழந்தைகளை சுகாதாரமான நடவடிக்கைகளை கடைபிடிக்க பழக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.