உரங்கள் உள்ளிட்ட விவசாய இரசாயனங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் காரணமாக கடந்த வருடம் ஏற்பட்ட இழப்பு 24,000 கோடி ரூபா என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வில் கலந்துகொண்ட பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரள இதனை தெரிவித்தார்.
அரிசி இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதால் 2022 மகா பருவத்தில் நெல் உற்பத்தி 36 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.