காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அம்பன்பொல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நிகவலய பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, எஹெட்டுவெவ பிரதேசத்தில் யானை தாக்கியதில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கல்கமுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், எஹெட்டுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
