உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் முறைமையொன்று தயாரிக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்தார்.
இந்த அதிகாரிகள் மீது அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த அரச மற்றும் அரை அரச ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 7,000 ஆகும்.
இந்நிலையில், அவர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.