சீன அரசாங்கம் நன்கொடையாக வழங்கிய டீசலை விரைவாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
விவசாய அபிவிருத்தி திணைக்களத்துடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 6.98 மில்லியன் லிற்றர் டீசலை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்த டீசல் இம்முறை பெரும்போகத்தில் அரை ஏக்கர் முதல் இரண்டரை ஏக்கர் வரை நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இதற்கமைய, ஒரு ஹெக்டேருக்கு 15 லிற்றர் டீசல் வழங்கப்படவுள்ளது.
இதனை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை எதிர்வரும் வாரம் முதல் ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கான டோக்கன்களை அனைத்து விவசாய சேவை மத்திய நிலையங்களிலும் விவசாயிகள் பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.