வருமான வரியை செலுத்தாதவர்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு இறைவரி ஆணையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் தலைமையிலான முக்கிய கூட்டமொன்றில் வைத்து இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் திட்டத்தில் இருக்கின்ற நிலையில், வரி வருமானம் தவறவிடப்படாமல் திரட்டும் விடயத்தில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
எனவே வரி செலுத்தத் தவறுகின்றவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து வரியைத் திரட்ட நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.