இலங்கை விமானப்படைக்கு சொந்தமான துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் திருடப்பட்டமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் விமானப்படை சிப்பாய் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிகிரியாவில் உள்ள இலங்கை விமானப்படையின் பாதுகாப்பு சோதனைச் சாவடியிலிருந்து டி-56 ரக துப்பாக்கியொன்றும், 60 தோட்டாக்களும் திருடப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.