Friday, June 13, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோப் குழுவின் தலைவர் பதவிக்கு மீண்டும் ஹர்ஷவின் பெயர் பரிந்துரை

கோப் குழுவின் தலைவர் பதவிக்கு மீண்டும் ஹர்ஷவின் பெயர் பரிந்துரை

வெற்றிடமாகியுள்ள நாடாளுமன்றத்தின் அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் பதவிக்காக கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் பெயரை மீண்டும் பரிந்துரைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழுவின் நேற்றைய(01) கூட்டத்தின் போது, இந்த பிரேரணை கட்சித் தலைவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம ஏற்பாட்டாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்‌ஷ்மன் கிரிஎல்ல குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து எதிர்க்கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் தெரிவுக்குழுவின் தலைவர் பதவிக்கு கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும்இ இந்த பிரேரணை தொடர்பில் சபாநாயகரின் தலைமையில் கூடவுள்ள அனைத்து கட்சிகளினதும் பிரதிநிதிகள் அடங்கிய நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அனுமதியை பெற வேண்டியுள்ளது.

கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர்களை அந்தந்த குழுக்களின் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் தெரிவு செய்கின்ற போதும், நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அங்கீகாரத்துடனே அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் நியமனம் இடம்பெறுகின்றது.

ஆளும் கட்சியினரின் பிரேரணைக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க, அரசாங்க நிதி தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில்இ அவர் பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles