புதிதாக 2500 வைத்தியர்களை சேவையில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்காக நிதி அமைச்சின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சந்திர குப்த குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் வைத்தியர்களுக்கான வெற்றிடம் நீங்கும் என சுகாதார அமைச்சின் செயலாளர் கூறினார்.