கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸாரின் காவலில் இருந்தபோது பல கொலைகளுடன் தொடர்புடைய குற்றவாளியை மீட்டு அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் பிக்குமார்கள் இருவரும், கார் சாரதியும் ஹெட்டிபொல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக மேல்மாகாண தென் குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் பயன்படுத்திய காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதன்படி ஹெட்டிபொல ரிட்டதெனிய விகாரையின் தலைவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 வயதான சாமனேர தேரரின் பாதுகாப்பிற்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட காரில் இருந்து டுபாய்க்கு தப்பிச் செல்ல வந்த சந்தேகநபரின் இரண்டு பயணப் பொதிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.