ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள குளம் ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் பயணித்த சைக்கிளுடன் குளத்திற்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஊர்காவற்துறை – மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் குறித்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.