Monday, August 11, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிவசாய பயிராகும் 'புல்'

விவசாய பயிராகும் ‘புல்’

கால்நடை தீவனத்திற்காக வளர்க்கப்படும் புல்லை விவசாய பயிராக பெயரிட விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

இலங்கையில் கால்நடைத் தீவனத்திற்குத் தேவையான புல் நிறுவன் அல்லது தனிப்பட்ட முறையில் முறையாக பயிரிடப்படாததால், கால்நடைத் தீவனத்திற்குப் போதுமான புல் கிடைக்காமை இலங்கையின் கால்நடை உற்பத்தித் தொழிலை மேம்படுத்துவதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்கள் பசுக்களில் இருந்து தினசரி பெறும் பால் அளவு குறைந்து வருவதற்கு உயர்தர புல் இல்லாதமை ஒரு காரணம் என்று கண்டறிந்துள்ளனர்.

இதன்படி, மற்ற பயிர்களை பயிரிட முடியாத நிலங்களில், அதிக பால் உற்பத்தி செய்யக்கூடிய உயர்தர புல் வகைகளான CO3, CO5, பச்சோன் (Pachon), நேப்பியர்(Napier)வகை புல் வகைகளை பயிரிட விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles