உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஈடுபடும் ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சுற்றுநிருபம் திங்கட்கிழமைக்குள் வெளியிடப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
எனவே, உயர்தரம் எழுதிய பிள்ளைகள் குறித்து தொழில்சார் சங்கங்கள் சிந்தித்து ஆசிரியர்களை விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு அனுப்புவார்கள் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.