புதிய தேர்தல்கள் ஆணைக்குழுவொன்றை நியமிக்கும் கோரிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கும் வகையில் தான் கூடி அந்த பணியை மேற்கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (23) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, புதிய தேர்தல் ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு அல்லது தேர்தலை நடத்துமாறு நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் மாத்திரம் தேர்தல் திகதியை ஏற்றுக்கொண்டிருந்தால், புதிய ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் அல்லது தேர்தலை நடத்த வேண்டும் எனவும் தயாசிறி ஜயசேகர மேலும் கோரியுள்ளார்.