Friday, February 13, 2026
23.9 C
Colombo
செய்திகள்உலகம்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்

சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 5 பேர் பலியாகினர்.

நேற்று (19) அதிகாலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னமும் வெளியாகவில்லை.

கடந்த 06 ஆம் திகதி சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் பின்னர் இடம்பெற்ற முதலாவது எறிகணைத் தாக்குதல் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டமாஸ்கஸ் நகரத்தின் மீது இறுதியாக கடந்த ஜனவரி 2 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டது, இதன் போது பல சிரிய துருப்பினர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles