Monday, September 1, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்த மனு விசாரணைக்கு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்த மனு விசாரணைக்கு

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் ஒருவர் சமர்ப்பித்த ரிட் மனு இன்று(20) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

எஸ். துரைராஜா மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக உயர் நீதிமன்ற வழக்குகள் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு கடந்த 10ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்கப்பட்டபோது, ​​அடுத்தகட்ட பரிசீலனைக்காக 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனவே குறித்த மனுவை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு முன்னர் அழைக்குமாறு கோரி கேணல் தனது சட்டத்தரணிகள் ஊடாக மனுவொன்றை தாக்கல் செய்தார்.

அதன் பின்னணியில், இது தொடர்பான மனுவை இன்றைய தினம் பரிசீலிக்க உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles