Sunday, June 15, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபயிர்களை சேதப்படுத்தும் ஆறு விலங்குகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

பயிர்களை சேதப்படுத்தும் ஆறு விலங்குகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

பயிர்களை அழிக்கும் விலங்குகளை கொல்ல விவசாயிகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உருளைக்கிழங்கு விவசாயிகளுடனான சந்திப்பின் போது, ​​குரங்குகள் அப்பகுதியில் உருளைக்கிழங்கு பயிர்களை நாசம் செய்வது குறித்து அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர், குரங்குகள் உட்பட பயிர்களை அழிக்கும் ஆறு விலங்குகள் இலங்கையில் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இரு குரங்கு வகைகள் , பன்றி, மயில், மர அணில், முள்ளம்பன்றி என்பனவே இவ்வாறு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
எனவே, அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையையும் பயன்படுத்த விவசாயிகள் சுதந்திரமாக இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் உட்பட அதிகப்படியான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் , சிக்கலைத் தீர்க்க வேறு வழிகள் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles