நாட்டில் சில பகுதிகளில் நாளை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அப்பிரதேசங்களில் மின்னலுடன் கூடிய பலத்த காற்று வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.