தான் ஆட்சியில் இருந்திருந்தால் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று (17) களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வழங்கப்படும் போது தான் ஆட்சியில் இல்லை, அதனால் பாதகமாகவே அவற்றைப் பெற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.