துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் 45,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்கு இலங்கை இராணுவத்தின் ஆதரவை வழங்குவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்த விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் சாகல ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் பாதுகாப்புத் துறைத் தலைவர்கள் குழுவும் கலந்துகொண்டது.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் 39,672 பேரும், சிரியாவில் 5,800 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதும் பல நாடுகளைச் சேர்ந்த நிவாரண சேவைக் குழுக்கள் துருக்கியில் நிவாரண சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ளன.