அடுத்த பருவத்திற்கு தட்டுப்பாடு இன்றி உரங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (18) காலை இடம்பெற்ற நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2022ஃ2023 மஹா பருவத்தில் உரம் கொள்முதல் செய்வதற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதனால்இ அந்தப் பருவத்தில் சுமார் 24 இலட்சம் மெற்றிக் டன் நெல் கிடைக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த வாரம் மிக முக்கிய செலவீனமாக அரசு ஊழியர்களின் சம்பளம் வழங்கப்படவுள்ளது.
அதன்பிறகு எதிர்வரும் வாரத்தில் கொள்முதல் செய்யப்படும் இரசாயன உரங்களுக்கு 350 கோடி ரூபாவும், இயற்கை உரங்களுக்கு 220 கோடி ரூபாவும் வழங்கப்படும்.
இதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்திற்குள் உரத்துக்காக செலுத்த வேண்டிய அனைத்து பணமும் செலுத்தப்பட்டு, யால பருவத்திற்கு தேவையான உரங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பம் என அவர் மேலும் தெரிவத்தார்.