சீனா இலங்கைக்கு வழங்கியுள்ள கடன்களை மறுசீரமைப்பு செய்வதை தாமதம் காட்டி வருவதால், சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியும் தாமதித்து வருகிறது.
இந்த நிலையில் சீனாவின் விடயத்தை கருத்திற்கொள்ளாமல் இலங்கைக்கான கடன் வழங்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்க சர்வதேச நாணய நிதியம் ஆலோசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
விடயமறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி ப்ளூம்பெர்க் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் தலைமையில், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலகவங்கி என்பவற்றின் பிரத்தியேக சந்திப்பின் பின்னர் இது குறித்து அவதானம செலுத்துவதாக கூறப்படுகிறது.