பிறந்து ஏழு நாட்களே ஆன சிசுவை கொலை செய்தமைக்காக சந்தேகத்தின் பேரில் 28 வயதான தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பயாகல ஹல்கந்தவில கந்தகஹவில பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.
உயிரிழந்த குழந்தை அவருக்கு பிறந்த இரண்டு இரட்டை பெண்களில் இளைய குழந்தை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 15ஆம் திகதி குழந்தை படுக்கையில் இருந்து விழுந்ததாக கூறி களுத்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.
எனினும் பிரேத பரிசோதனையில் இது கொலை என தெரியவந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
சந்தேக நபரான தாய், சிறுமியை தரையில் மூன்று தடவை அடித்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.