பாதாள உலகக்குழு தலைவன் ‘டுபாய் ஜூட்’ என்பவரின் உதவியாளர் 5 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொனஹேன விசேட அதிரடிப்படையினர் நேற்று கந்தானை பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரிடம் 1.5 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான சந்தேகநபர், டுபாய் ஜூட் நகரில் இயங்கி வரும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் செயற்பாட்டாளர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.