இந்த வருடம் இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் 2000 பராமரிப்பாளர் வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நாட்டின் விசேட தூதுக்குழுவினர் அண்மையில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவை சந்தித்து கலந்துரையாடியதையடுத்து அங்கு இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பராமரிப்பாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ள இடங்கள் மற்றும் இஸ்ரேலில் பராமரிப்பாளர் வேலை வழங்குவதற்காக இடைத்தரகர் பணம் பெற்றால், இது தொடர்பான அனைத்து தகவல்களையும் தமக்கு வழங்குமாறு அந்நாட்டு மக்கள் மற்றும் குடிவரவு முகமை பிரதிநிதிகள் அமைச்சரிடம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.