உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்புக்குத் தேவையான வாக்குச் சீட்டுகள் இன்று (17) அல்லது நாளை (18) க்குள் கிடைக்கப் பெற்றால், திட்டமிட்டுள்ள நாட்களுக்குள் தபால் மூல வாக்கெடுப்பை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தபால்மூல வாக்கெடுப்பு இம்மாதம் 22, 23, 24 ஆகிய திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டது.
எவ்வாறாயினும், இன்று (17) மற்றும் நாளைய (18) தினத்துக்குள் வாக்குச் சீட்டுகள் கிடைக்கப்பெறாவிட்டால் தபால் மூல வாக்கெடுப்பு திகதி எதிர்வரும் திங்கட்கிழமை தீர்மானிக்கப்படும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.