மின் கட்டண திருத்தம் காரணமாக இன்று (17) முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர உறுதியளித்துள்ளார்.
புதிய கட்டணங்களை அமுல்படுத்துவதன் மூலம் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
66% மின் கட்டண அதிகரிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த கட்டண அதிகரிப்பின் மூலம் மின்சார சபைக்கு சுமார் 287 பில்லியன் ரூபா கூடுதல் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.