வரி விதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் முதலாம் திகதி பாரிய தொழிற்சங்க போராட்டம் ஒன்றுக்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக அறியமுடிகிறது.
எரிபொருள், மின்சாரம், துறைமுகம், நீர்வழங்கல், சுகாதாரம், கல்வி, வங்கி உள்ளிட்ட பல்வேறு தொழிற்துறையினர் இணைந்து இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்யவுள்ளனர்.
அவர்களுக்கு இடையில் நேற்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.