பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குளிப்பதை கையடக்கத் தொலைபேசி மூலம் வீடியோ பதிவு செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்கிசை பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் காவலரே இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்தார்.
பெண் காவலர்களுக்கான குடியிருப்பின் குளியலறையில் குறித்த பெண் காவலர் குளித்துக் கொண்டிருந்தபோது, சந்தேக நபர் அதை வீடியே செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் ரகசியமாக வீடியோ பதிவு செய்ததைக் கண்ட பெண் காவலர் பின்னர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட புகாரின்படி, சந்தேகத்தின் பேரில் காவலர் கைது செய்யப்பட்டார்.
மேலும் அவரது கைப்பேசியை ஆய்வு செய்தபோது, குறித்த பெண் காவலரின் குளியல் வீடியோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.