மின் கட்டணம் 66% ஆல் அதிகரிப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
அதற்கமைய, பால், தயிர், இறைச்சி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும் இரட்டிப்பாகும் என தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கால்நடை உற்பத்தியாளர்கள் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் அதி குளிரூட்டிகளைப் பயன்படுத்துகின்றனர்.
மின்கட்டண அதிகரிப்பால் உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்த வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இதனால் எதிர்காலத்தில் இத்தொழிலை எவ்வாறு தொடர்வது என்ற பிரச்சினையும் தற்போது ஏற்பட்டுள்ளது.
மேலும்இ சம்பந்தப்பட்ட விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் இவற்றை கண்டுகொள்வதில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்