வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன், அவரது மகளின் பெயரை நாட்டிலுள்ள வேறு எவரும் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
அவர் தனது பத்து வயது மகளான ஜூ ஏ வின் பெயரை வேறு எந்த பெண்ணிற்கும் வைக்க கூடாது என்றும் அந்தப் பெயர் கொண்டவர்கள் ஒரு வாரத்தில் அவர்களது பெயரை மாற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
வட மற்றும் தென் பியாங்யாங்கில் வசிப்பவர்களில் ஜூ-ஏ என்ற பெயரை கொண்ட பெண்களின் பிறப்புச் சான்றிதழை மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன.
முன்னதாகவே அந்நாட்டின் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை மக்கள் வைத்துக் கொள்வதற்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.