சொகுசு கார் மோதியதில் ஒன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
களுபோவில ரூபன் பீரிஸ் மாவத்தையை சேர்ந்த சிறுமி ஒருவரே இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
அவரது மாமா ஓட்டி வந்த கார் மோதியதில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
சொகுசு காருடன், தொழிலதிபரான சிறுமியின் தாயாரின் சகோதரர் (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று பிற்பகல் வீட்டுக்கு முன்னால் உள்ள கராஜில் இருந்து காரை எடுத்துச் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காரின் முன்பக்கமாக வந்த சிறுமி மீது பம்ரம் மோதி அவர் தரையிலும் விழுந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனை கண்ட நபர் ஒருவர் சாரதிக்கு தகவல் கொடுத்ததையடுத்து, சந்தேக நபர் மீண்டும் அந்த சிறுமி காரின் பம்பருக்கும் தரைக்கும் இடையில் சிக்கும் வகையில் செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியை களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதித்து, அடிப்படை சிகிச்சைகளை வழங்கிய பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதனையடுத்து இன்று காலை சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.