கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் இரு அரச பேருந்துகளும் தியகல கினிகத்தேனை பிரதான வீதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இவ்விபத்தில் 8 பேர் காயமடைந்த நிலையில், கினிக்கத்தேனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து சம்பவம் தொடர்பில் கினிக்கத்தேனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.