Wednesday, March 11, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட போதை மாத்திரைகள் மீட்பு

வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட போதை மாத்திரைகள் மீட்பு

ஜேர்மனி, இங்கிலாந்து மற்றும் கனடாவில் இருந்து அனுப்பப்பட்ட “குஷ்” எனப்படும் போதை மாத்திரைகள் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, பாணந்துறை, பொரலஸ்கமுவ, பாதுக்க மற்றும் பிலியந்தலை ஆகிய இடங்களில் போலியான இடங்களுக்கு விநியோகிக்கப்பட்ட இந்த கடத்தல் பொருட்களை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

பொதிகளுக்குள், புலனாய்வாளர்கள் 207 எக்ஸ்டஸி மாத்திரைகள் மற்றும் 750 கிராம் கஞ்சாவைக் கண்டுபிடித்துள்ளனர். அதன் மதிப்பு சுமார் 13 மில்லியன் ரூபா என கண்டறியப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பொருட்களை மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) பெற்றுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles