பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதீத மின் கட்டண உயர்வால் பேக்கரி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் கமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேலும் இதனை தெரிவித்தார்.
பேக்கரி தொழிலில் மாவு பிசைவது முதல் பேக் செய்வது, உணவு தயாரிப்பது, கடையில் சந்தைப்படுத்துவது வரை மின்சாரம் தேவைப்படுகிறது.
இவ்வாறு நடந்தால் பேக்கரி தொழிலை எப்படி தொடர முடியும்? என அவர் கேள்வி எழுப்பினார்.
சமீப நாட்களாக எரிவாயு விலை ரகசியமாக உயர்த்தப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக பேக்கரி உணவுகளின் விலையை தயக்கத்துடன் அதிகரிக்க வேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.