தடையற்ற மின்விநியோகத்தை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
புதிய கட்டணம் அமுலுக்கு வருகின்ற நிலையில், குறைந்த வருமானம் பெறுகின்றவர்களுக்கு சலுகைகள், நிவாரணங்களை வழங்கவும் ஜனாதிபதி பணித்துள்ளார்.
மேலும், மத மற்றும் அரச கல்வி நிறுவனங்களுக்கு சூரிய ஒளி மின்சார தகடுகளை வழங்கவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.