Thursday, June 19, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசம்பளமற்ற விடுமுறை எடுத்துள்ளோம் - சிக்கலில் வேட்பாளர்கள்

சம்பளமற்ற விடுமுறை எடுத்துள்ளோம் – சிக்கலில் வேட்பாளர்கள்

உள்ளூராட்சி தேர்தல் மார்ச் 9 ஆம் திகதி நடைபெறுமா? நடக்காதா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இதனால் தமது வேலையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, ஏராளமான வேட்பாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

இந்த ஆண்டு உள்ளூராட்சி தேர்தலுக்காக அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் சம்பளமற்ற விடுமுறையை பெற்று பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து போட்டியிட்டுள்ளனர்.

தாங்கள் சம்பளமின்றி விடுமுறையில் இருப்பதாகவும், தேர்தல் இன்னும் சில மாதங்கள் தாமதமானால், தமது குடும்ப பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles