சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 2020/2021 தொகுதி மாணவர்களைத் தவிர அனைத்து பீடங்களும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
அதன்படி, 2020/2021 தொகுதி மாணவர்கள் தவிர, வதிவிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்துப் பீடங்களும் விடுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று துணைவேந்தர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
2020/2021 தொகுதி மாணவர்கள் தவிர்ந்த அனைத்து பீடங்களின் மாணவர்கள் இன்று (16) மாலை 4 மணிக்குப் பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் ஆண்டு மாணவர்களை சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று தாக்கியதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.